அட ஈஸ்வரா, இப்படியும் நடக்கிறதே! பசறையில் நடந்த ஓர் சம்பவம் பற்றிய பார்வை…

ஆட்டோவுக்கான லீசிங் தொகையை செலுத்த முடியாததால் ஆட்டோவை ஒளித்துவைத்துவிட்டு, அது காணாமல்போய்விட்டதாக பசறை பொலிஸ் நிலையத்தில் போலியான முறைப்பாட்டை முன்வைத்த நபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், ஆட்டோவும் மீட்கப்பட்டுள்ளது.

பசறை – தொலம்பவத்த பகுதியில் வாடகைக்கு கராஜ் நடத்தி வரும் நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

” நான் பசறைக்கு வரும்வழியில், மூவர் ஆட்டோவை நிறுத்தினர். ஹிங்குருகடுவ பகுதிக்கு செல்லவேண்டும் என கூறினர். செல்லும் வழியில் இடைநடுவே எரிபொருள் தீர்ந்துவிட்டது. இதனால் ஆட்டோவை அங்கேயே நிறுத்தி, எரிபொருள் வாங்குவதற்காக பசறை சென்றேன். திரும்பிசென்று பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை.” – என்றே குறித்த நபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேற்படி முறைப்பாடு தொடர்பில் விரைந்து விசாரணை நடந்திய பசறை பொலிஸார், உண்மையை கண்டறிந்தனர். மீதும்பிட்டிய பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆட்டோவையும் மீட்டனர்.

செய்தி ராமு தனராஜா

Related Articles

Latest Articles