அடக்கம் செய்யப்பட்ட நபர் எழு நாட்களுக்கு பின் உயிருடன் வந்ததால் நாவலப்பிட்டியவில் பரபரப்பு – நடந்தது என்ன?

உயிரிழந்த நபரொருவரின் மரண விசாரணைகள் முடிவடைந்து, சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு – சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டு ஏழாவது நாளில், உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர் மரண விசாரணை அதிகாரியை தேடி வந்த சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விஷேட விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கம்பளை பஸ் நிலையத்தில் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டு கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் அவரின் சடலம் வைக்கப்பட்டது.

குறித்த சடலத்தை அடையாளம் காணும் நோக்கில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில், மேற்படி சடலம் நாவலப்பிட்டி உடஹேன்தென்ன மேரிவில தோட்டம் கீழ் பிரிவைச்சேர்ந்த 59 வயதுடைய லாசலர் மைக்கலுடையது என கடந்த வாரம் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் தாய் , சகோதரன் உள்ளிட்ட உறவினர்கள் சடலத்தை அடையாளமும் காட்டியுள்ளனர்.

பின்னர் கம்பளை திடீர் மரணவிசாரணை அதிகாரி நளின் மெதவக்கவினால் மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், லாசர் மைக்கலுடைய தாயினால் 70 ஆயிரம் ரூபா செலவு செய்து மேற்குறிப்பிட்ட தோட்ட மயானத்தில் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது

இவ்வாறு சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டு சில தினங்களில் உயிரிந்ததாக கூறப்பட்ட நபர் தனது தாயினை தேடிச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான குடும்பத்தார், ” நீ கம்பளை பஸ் நிலையத்தில் இறந்து கிடந்து, உனது சடலத்தினை நல்லடக்கம் செய்துவிட்டோமே…” என கூறியுள்ளனர்.

இதன் போது குறித்த நபர் தான் கம்பளை நகருக்கு செல்லவில்லையெனவும் தான் நாவலப்பிட்டிய நகரில் தங்கியிருந்ததாகவும் கூறியதையடுத்து நேற்று முன்தினம் (27) மீண்டும் மரண விசாரணை அதிகாரியை தேடி வந்துள்ளனர்.

இதன் போது நல்லடக்கம் செய்யப்பட்ட நபரை அடையாளம் காணும் பொருட்டு கம்பளை பொலிஸார் விஷேட விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

கம்பளை நிருபர்

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles