” அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்” – மேடையில் கண்ணீர்விட்டு அழுத வடகொரிய ஜனாதிபதி….!

” நாட்டில் உள்ள பெண்கள் அதிகமான குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்” என வடகொரிய ஜனாதிபதி  கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

வல்லரசு நாடான அமெரிக்காவுக்கே அடிக்கடி கிலி ஏற்படுத்தும் நாடாக இருக்கிறது, வடகொரியா.

அமெரிக்கா மட்டுமல்ல, அண்டை நாடான தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் அதே பயம்தான் உள்ளது. காரணம், அது எந்த நேரத்தில் என்ன செய்யும் எனத் தெரியாததுதான். அந்நாட்டின் ரகசியங்கள் மற்ற நாடுகளைப் போன்று உடனே வெளியில் தெரிவதில்லை.

 அப்படியான கொடூர கட்டுப்பாடுகளைத் தன் குடிமக்களுக்கு விதித்துள்ளது வடகொரியா. இந்த நாட்டின் ஜனாதிபதியாக கிம் ஜாங் உன் உள்ளார்.

தலைநகர் பியாக்யாங்கில் நடந்த பெண்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ”நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துவருகிறது. இதனால் பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் நம் நாட்டைப் பாதுகாக்கும். பிறப்பு விகிதம் குறைவதைத் தடுப்பது மட்டுமின்றி, குழந்தைகளைப் பராமரித்து நன்றாக வளர்க்க வேண்டும்.

முறையாக கல்வி வழங்க வேண்டும். இதனை செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என உரையாற்றினார். இப்படி அவர் பேசியபோது, தன்னையும் மீறி கண்கலங்கினார். இதையடுத்து அவர் தனது கையில் இருந்த கைக்குட்டையை எடுத்து கண்ணீரைத் துடைத்துக்கொண்டார். இதைப் பார்த்து சில பெண்களும் கண்ணீர் வடித்தனர்.  !

வடகொரியாவில் தற்போது குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து வரும் நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, தற்போதைய சூழலில் ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி நடப்பு ஆண்டில் வடகொரியா பெண்களிடம் குழந்தை பிறப்பு சராசரி என்பது 1.8 என்ற அளவில் உள்ளது. இது வடகொரியாவின் அண்டைநாடுகளைவிட அதிகம்தான். இருப்பினும் பெண்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என கிம்ஜாங் உன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தன் நாட்டுப் பெண்கள் 8 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனப் பேசியிருந்ததுடன், அதற்கு, முன்னோர்கள் அதிக குழந்தை பெற்றெடுத்ததையும் உதாரணமாகக் காட்டியிருந்தார். அந்த நாட்டில் தற்போது வரை 3 லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, படைபலத்தைப் பெருக்கும் வகையில் அங்கு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அரசு ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles