நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் என்பது தொடர்பில் பரிசோதனை நடத்துவதை விடுத்து நாட்டின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் சபையில் வலியுறுத்தினார்.










