அமைச்சு பதவியை இழந்த நசீர் அஹமட்டுக்கு ஆளுநர் பதவி!

தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாபா அபேவர்தன மற்றும் வட மேல் மாகாண ஆளுநராக நசீர் அஹமட் ஆகியோர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று முற்பகல் பதவியேற்றுக் கொண்டனர்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியில் நஷீர் அஹமட் சுற்றாடல் அமைச்சராக இருந்தார். எனினும், உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் அவர் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்ததால், அமைச்சு பதவியும் இல்லாமல்போனது.

Related Articles

Latest Articles