அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிப்பு: ட்ரம்பின் ஆசை நிறைவேறுமா?

இன்றைய தினம் 2025 உலக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த விருதுக்குரியோர் யார் என்ற தெரியாத நிலையில், தனக்கு தான் நோபல் பரிசு தர வேண்டும் என்று வெளிப்படையாக கூறி வரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ஆசை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நோபல் பரிசு எனக்குத்தான் தரவேண்டும், உலக நாடுகளின் மத்தியில் பல போர்களை நிறுத்தி உள்ளேன் என்று அவர் அடித்து வரும் தம்பட்டத்தை அவரை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் சில நாடுகள் உற்சாகமாக வரவேற்கின்றன.

ஏற்கனவே 7 போர்களை நிறுத்தி உள்ளேன், தற்போது இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டு விட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளதும், முக்கியத்துவம் பெறுகிறது. அவரின் கணக்கின்படி இது 8வது போர்நிறுத்தம் ஆகும்.

அமைதிக்கான ஜனாதிபதி டிரம்ப் என்று வெள்ளை மாளிகை தமது எக்ஸ் வலை தள பதிவில் வெற்றி வீரனான டிரம்ப் நடந்து வருவது போன்ற ஒரு படத்துடன் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles