இந்தியாவில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான அயலக தமிழர் மாநாட்டை தமிழ் நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்ததுடன், இதில் சிறப்பு விருந்தினராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன், வட மாகாண முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய செந்தில் தொண்டமான், இலங்கையில் ஏற்பட்ட கோவிட் தொற்று, பொருளாதார நெருக்கடி மற்றும் டிக்வா புயலின் போது இந்தியா அரசு இலங்கைக்கு வழங்கிய மனிதாபிமான உதவி பாராட்டத்தக்கது எனவும், அதற்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்தார்.










