அரசமைப்பை மீறியுள்ளார் ஜனாதிபதி – பீரிஸ் குற்றச்சாட்டு

” பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசமைப்பைமீறும் வகையில் செயற்பட்டுள்ளார். அரசமைப்பு பேரவையை உதாசீனப்படுத்திவிட்டு இது விடயத்தில் தன்னிச்சையாக செயற்பட்டுள்ளார். இது பயங்கரமான – பாரதூரமான – தவறான முன்னுதாரணமாகும்.” – என்று சட்டத்துறை பேராசிரியரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பொலிஸ்மா அதிபருக்கு நான்கு தடவைகள் சேவைகால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 3ஆவது மற்றும் 4ஆவது தடவைகளின்போது சேவை நீடிப்பு வழங்குவதற்கு அரசமைப்பு பேரவை அனுமதி வழங்கவில்லை. அரசமைப்பு பேரவையின் கருத்தை நிராகரித்துவிட்டே தன்னிச்சையாக ஜனாதிபதி பதவி நீடிப்பை வழங்கியுள்ளார். இது பயங்கரமான முன்னுதாரணமாகும். பிரதமர் நீதியரசர், நீதியரசர்கள், சட்டமா அதிபர் உள்ளிட்ட உயர் நியமனங்களுக்கு அரசியலமைப்பு பேரவையின் அனுமதி அவசியம். இதனை ஜனாதிபதி கருத்திற்கொள்ளவில்லை. அவர் அரசமைப்பைமீறும் வகையில் செயற்பட்டுள்ளார். இதனை நாம் எதிர்க்கின்றோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles