அரசாங்கத்தின் அடக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரியும், அணைத்து பல்கலை கழக மாணவ ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே, ஸ்ரீறிதம்ப தேரர் உள்ளிடவர்களை உடன் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி கொழும்பு மருதனை எல். பின்ஸ்டன் மண்டபத்துக்கு முன்னால் உள்ள சுற்று வட்டத்தில் தற்போது ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் பேரணியாக கொழும்பு கோட்டை புகையிரதம் நிலையம் வரை செல்ல உள்ளதோடு அங்கு பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.
