அரசியலில் அனாதைகள் ஆகியுள்ளவர்கள், இன்று என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
” நுவரெலியா மாவட்டத்துக்கென புதிதாக ஐந்து பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படுவதற்கான அமைச்சரவை பத்திரத்தை அப்போதைய அமைச்சர் பழனி திகாம்பரம் முன்வைக்கவில்லை என்றும் இது குறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமை மூலம் வெளிக்கொண்டுவர உள்ளதாகவும்.” முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிடும்போதே தொழிலாளர் தேசிய சங்க உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
” எமது தலைவர்தான் அவருக்கு அரசியல் வாழ்வு கொடுத்தார். அதனை மறந்து செயற்படுகின்றார்.
குறித்த விடயத்திற்கான அமைச்சரவை பத்திரத்தை துறைசார் அமைச்சரே சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அந்தவகையில் அப்போது அமைச்சராக இருந்த பழனி திகாம்பரம், அப்போதைய துறைசார் அமைச்சருடன் பேசி இதனை சமர்பித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எமது தலைவருக்கு எப்போதும் மக்கள் ஆதரவு இருப்பதாகவும் அரசியல் வங்குரோத்து அடைந்தவர்கள் இவ்வாறு பொய்களை கூறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திலகராஜ் தரப்பினர் , தேசிய தொழிலாளர் சங்கத்தில் மீண்டும் இணைந்து செயற்பட முயற்சித்த போதிலும் அதற்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் இவ்வாறு செய்வது அறியாது தடுமாறிக்கொண்டிருக்கின்றனர்.” – எனவும் அந்த உறுப்பினர் குறிப்பிட்டார்.
