” மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும். ராஜபக்ச அல்லாத ஒருவர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைப்பதவிக்கு வரவேண்டும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
” மஹிந்த ராஜபக்சவின் பொருளாதாரக் கொள்கைகளை கடுமையாக 2014 இலேயே விமர்சித்தவன் நான். நாடு வங்குரோத்து அடையும் என அன்றே கூறியிருந்தேன்.
நாட்டை வங்குரோத்து அடைந்ததரப்புடன் நாம் இணையமாட்டோம். எனவே, மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும். ராஜபக்ச அல்லாத ஒருவரிடம் மொட்டு கட்சி தலைமைப்பதவி வழங்கப்பட வேண்டும்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.
