அரசுக்கு வாசு விடுத்துள்ள எச்சரிக்கை!

அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கம் கிடையாது, ஆனால் அதற்காக தவறான தீர்மானங்களுக்கு துணைபோகவும் முடியாது என தெரிவித்துள்ள நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்கநிறுவனத்திற்கு வழங்கும் வகையிலான ஒப்பந்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்வை வழங்குமென முழுமையாக எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

எமது தலைமையிலான அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாக செயற்படுகின்றமை கவலைக்குரியது. கொள்கைக்கு எதிரான தீர்மானங்கள், அரசாங்கம் தொடர்பில் மக்களின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியையும், அரசாங்கத்தின் கொள்கையையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குண்டு.

யுகதனவி மின்நிலையம் இயற்கை எரிவாயு விநியோகத்தின் ஊடாக செயற்பட வேண்டும் என்பது அவசியமானதாகும்.

இயற்கை எரிவாயு விநியோக நிறுவனத்திற்கும்,மின்சாரத்துறை அமைச்சுக்குமிடையில் சாதாரன ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும். அதனை விடுத்து எரிவாயு விநியோகத்தின் உரிமையை பிற நாட்டின் தனியார் நிறுவனத்திற்கு ஏகபோகமாக விட்டுக் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அமெரிக்க நிறுவனம் இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஏகபோக உரிமையை தனதாக்குவதன் ஊடாக எதிர்காலத்தில் தோற்றம் பெறும் சவால்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அதன் காரணமாகவே அமைச்சரவையின் மூன்று பிரதான உறுப்பினர்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறோம்.

யுகதனவி விவகாரத்திற்கு சமூகத்தின் மத்தியில் பல எதிர்ப்புக்கள் தோற்றம் பெற்றுள்ளன.

கைச்சாத்திடப்பட்டுள்ள யுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிராக பல தரப்பினர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கை தாக்கல் செய்துள்ளார்கள்.

நீதிமன்றம் சிறந்த தீர்வை பெற்றுக் கொடுக்கமென எதிர்பார்க்கிறோம் என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles