“அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பயங்கரவாத தடை சட்டத்தை பிரயோகிக்க வேண்டாம்”

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவதற்கான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

“கடந்த 30 வருட யுத்தத்தின் போது, யுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மாத்திரமன்றி, அப்பாவி தமிழ் இளைஞர்கள் பலரும் இப்பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, எவ்வித விசாரணைகளுமின்றி அநியாயமாக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

அதேபோன்று, ஈஸ்டர் தாக்குதலின் பிற்பாடு, அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள் என முஸ்லிம்களை குறிவைத்து இச்சட்டம் பிரயோகிக்கப்பட்டது.

தற்போது, நாட்டினை நாசமாக்கிய ஆட்சியாளருக்கு எதிராக போராடிய சிங்கள, தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் மீது இச்சட்டம் பிரயோகிக்கப்படுவதற்கான எத்தனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அப்பாவி தமிழ் இளைஞர்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டம் பிரயோகிக்கப்பட்ட போது, ஏனைய சமூகத்தவர்கள் அதற்கு எதிராக போதுமான அளவில் கைகோர்க்க முன்வந்திருக்கவில்லை.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மீது இச்சட்டம் பிரயோகிக்கப்பட்டபோது, பெரும்பான்மை சமூகத்தவர்கள் போதுமான அளவில் அதற்கெதிராக கைகோர்க்க முன் வந்திருக்கவில்லை. ஆனால், இன்று இந்நிலமையில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

பயங்கரவாத தடைச் சட்டம் இந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல், பயங்கரவாதத்துக்கு எதிராக அது பயன்படுத்தப்பட்டதை விடவும் அரசியல் உள்நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களே அதிகம் என்பது எல்லோருமே அறிந்த விடயம்.

நான் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, இன்றைய ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள், எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக பாராளுமன்றத்திலே மிகவும் காத்திரமாக குரல் கொடுத்த ஒருவர் என்பதை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். அதேசமயம், அவ்வாறான ஒருவர் இன்று ஜனாதிபதியாக இருக்கின்ற நிலையில், அறவழிப் போராட்டக்காரர்களை அவரது கையொப்பத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எண்ணி மிகவும் வேதனையடைகின்றேன்.

இவ்வாறு பயங்கரவாத தடைச் சட்டத்தை ஜனநாயக ரீதியில், அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பிரயோகிக்கின்ற பொழுது, தற்பொழுது நாடு எதிர்கொள்ளும் இக்கட்டான பொருளாதார நிலைமை இன்னும் மோசமடையும் என்பதை அச்சத்தோடு நினைவுகூற விரும்புகின்றேன்.

பயங்கரவாத தடைச் சட்டம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து, இச்சட்டம் பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதை விட அரசியல் தேவைகளுக்காகவே அதிகமாக பிரயோகிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, இப்பயங்கரவாத தடைச் சட்டம் இந்த நாட்டின் சட்டங்களிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். அது மாத்திரமின்றி, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles