சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சியின் (USAID) ஆசிய பணியகத்தின் துணை நிர்வாகி அஞ்சலி கவுர் நாட்டிற்கு வருகைதந்துள்ளார்.
துணை நிர்வாகி அஞ்சலி கவுர் தனது விஜயத்தின் போது கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், மூத்த அரசு மற்றும் சிவில் சமூகத் தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
இலங்கையின் உணவுப் பாதுகாப்பு, விவசாயம், எரிசக்தி மற்றும் அரசியல் துறைகளில் தற்போதைய நிலைமைகள் குறித்து அவர் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.










