ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்டோவில் வந்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் மைத்திரியிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர்,
“ தேர்தல் சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளமையினால் சட்டங்களுக்கு மதிப்பளித்து அரச வாகனங்களை பயன்படுத்தாது ஆட்டோவில் வந்துள்ளேன்.” – என்றார்.
இக்கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் பங்கேற்றிருந்தார்.