ஆபத்தான பயணம்: என்று அமையும் பாலம்?

ஆபத்தான பயணம்: என்று அமையும் பாலம்?

அம்பகமுவ பிர­தேச சபை மற்­றும் நாவ­லப்­பிட்டி நகரசபைக்குட்பட்ட சுமார் 2 ஆயிரம் பேருக்கு மேல் வசிக்கும் இம்­புல்­பிட்டி , மெத­கா­வ­து­­ர பிரதேசத்துக்கு பெயிலி வீதி­­யூ­டாக செல்லும் மகா­வலி ஆற்றைக் கடக்கும் 150 மீற்றர் தூரம் கொண்­ட பாலம் இன்­னை­மையால் அப்­பி­ர­தே­சத்­திற்கு செல்லும் மக்கள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகம்­கொ­டுத்து வரு­கின்­றனர்.

அப்­பி­ர­தே­சத்­தி­லி­ருந்து மகா­வலி ஆற்றைக் கடந்து 5 நிமி­டத்தில் நாவ­லப்­பிட்டி பெயிலி வீதி ஊடாக பிர­தான நகரை வந்தடைய முடியும்.

மகா­வலி ஆற்றைக் கடக்க பல ஆண்­டு­க­ளுக்கு முன் நிர்­மா­ணிக்கப்­பட்ட பாலம் , வெள்ளம் கார­ண­மாக அடித்துச் செல்­லப்­பட்டு பல வருடங்கள் கடந்த நிலையில் , நாவ­லப்­பிட்டி நக­ர­ச­பையால் ‘ஆட்­டுப்­பாலம்’ நிர்­மா­ணிக்­­கப்­பட்­டது.
எனினும், வெள்ளம் கார­ண­மாக அதுவும் சேத­ம­டைந்தது.

எனவே தினமும் தொழில் நட­வ­டிக்­கை­க­ளுக்­கா­கவும் அன்­றாட தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்­கா­கவும் பாட­சாலை மாண­வர்­களின் நன்மை கருதி தற்­கா­லி­க­மாக மூங்­கிலால் செய்­யப்­பட்ட படகு மூலமே தற்­போது அப்­பி­ர­தேச மக்கள் ஆற்றை பாரிய ஆபத்­திற்கு மத்­தியில் தினமும் கடந்து வரு­கின்­றனர்.

குறிப்­பிட்ட பிரசே வாசிகளால் நிர்­மா­ணிக்­கப்­பட்ட இந்த மூக்­கிலால் செய்­யப்­பட்ட படகில் 150 மீற்றர் ஆற்றைக் கடந்து பய­ணிக்க 20 ரூபா வரை கட்­டணம் அற­வி­டப்­ப­டு­கி­றது.

வந்து செல்ல சாதா­ர­ண­மாக நாள் ஒன்­றுக்கு 40 ரூபா ஒரு­வ­ருக்கு தேவைப்­ப­டு­கின்­றது. மாத­மொன்­றுக்கு 1200 ரூபா நபர் ஒரு­வ­ருக்கு தேவைப்­ப­ட­கி­றது. ஒரு குடும்­பத்தில் சாதா­ர­ண­மாக 4 பேர் பய­ணிப்­ப­வர்கள் எனின் மாத­மொன்­றுக்கு 4800 ரூபா வரை ஆற்றைக் கடக்க செல­வ­ளிக்க வேண்­டி­­யுள்­ளது.

மேலும் மழை காலங்­களில் கடும் வெள்ளம் ஏற்­பட்டால் ஆற்றைக் கடப்­பது அபாய­க­ர­மாக பய­ணிக்க வேண்­டி­யுள்­ள­தாக மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

வி. தீபன்ராஜ்

Related Articles

Latest Articles