ஆபிரிக்க கொரோனா இலங்கைக்குள் நுழைவா? பரிசோதனை முன்னெடுப்பு!

தென் ஆபிரிக்காவில் கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு இனங்காணப்பட்டுள்ள நிலையில், அது இலங்கையிலும் பரவியுள்ளதா என்பது தொடர்பில் பரிசோதனை இடம்பெறும் – என்று ஸ்ரீயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

உலகில் இதுவரை அடையாளம் காணப்பட்டவற்றில் பிறழ்வுகளில் இது மிகவும் திரிபுடையது என ‘த ஜெருசலேம் போஸ்ட்’ பத்திரிகையின் இணையப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் தொற்று நோய்களுக்கான தேசிய கற்கை மற்றும் குவாசுலு நட்டால் ஆராய்ச்சி நிறுவகத்தின் ஆய்வில் புதிய பிறழ்வு தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது .

இந்த தொற்று வேகமாக பரவுவதுடன், இதற்கான தடுப்பூசியின் பெறுபேறு மந்தமாகவே உள்ளதாகவும் குறித்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

C.1.2 என புதிய பிறழ்வு விஞ்ஞான ரீதியில் பெயரிடப்பட்டுள்ளது.இந்தப் புதிய திரிபு கடந்த மே மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles