பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நாளை மறுதினம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இப்பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர். எனினும், அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைக்குமா என்பது பற்றி கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இன்னும் எவ்வித அறிவிப்பையும் விடுக்கவில்லை.
