“ஆடத்தெரியாதவனுக்கு மேடை கோணலாம் என்பதுபோல்தான் ஆயிரம் ரூபா விடயத்தில் அரசாங்கம் நடந்து கொள்கின்றது. சம்பள நிர்ணய சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள சலுகைகளும் நீக்கப்படக்கூடாது. இதனை செய்யாவிட்டால் சம்பள உயர்வு விவகாரத்திலும் அரசு பெயில் என்பது உறுதியாகிவிடும்.”
இவ்வாறு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
https://www.facebook.com/sjbsrilanka/videos/222905532901874
