இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை முழுமையாக வசப்படுத்தும் வேட்கையுடன் இந்திய அணி இன்று கடைசி ஒரு நாள் போட்டியில் களமிறங்குகின்றது.
இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் கவுகாத்தி மற்றும் கொல்கத்தாவில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் தோல்வியை தழுவிய இலங்கை அணி ஒரு நாள் தொடரையும் பறிகொடுத்து விட்டது.
இந்த நிலையில் இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது.
