அனைத்து மதக் கொள்கைகளும் சமமாக மதிக்கப்பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் கோவில் வளாகத்திற்குள் காலணி அணிந்து சென்ற பொலிஸ் அதிகாரியின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என இ.தொ.காவின் உப தலைவரும்,பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த இந்து கலாச்சார துறைக்கு பணிப்புரைவிடுத்துள்ளதாகவும், சம்பவத்தின் போது உரிய நடவடிக்கை எடுக்காததற்கு கோவில் நிர்வாகத்திடம் விளக்கம் அளிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளேன் எனவும் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.