ஆஸ்திரேலியாவில் மீண்டும் யூத எதிர்ப்பு தாக்குதல்: விசாரணை தீவிரம்!

ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னின் தென்கிழக்கு பகுதியில் காரொன்றின்மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஹனுக்கா பண்டிகை தொடர்பான வசனத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்த வாகனமொன்றே கிறிஸ்மஸ் தினமான இன்று அதிகாலை குறிவைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டவருகின்றனர்.

ஹனுக்கா என்ற வசனமானது யூத பண்டிகையொன்றை குறிக்கின்றது.

சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், பாதுகாப்பு கருதி அருகில் இருந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இது மத ரீதியில் நடத்தப்பட்ட தாக்குதலா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், யூத சமூகத் தாக்குதலை கண்டித்துள்ளது.

சிட்னி, போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் மேற்படி சம்பவம் யூத சமூகத்தின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெல்பேர்னில் நடந்துள்ள மேற்படி தாக்குதல் சம்பவத்தை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இது யூத எதிர்ப்பு தாக்குதலென சந்தேகிக்கப்படும் நிலையில், விசாரணைக்கு மத்திய அரசு உதவும் எனவும் அறிவித்துள்ளார்.

இப்படியான வெறுப்பு சம்பவங்களுக்கு ஆஸ்திரேலியாவில் இடமில்லை எனவும் அவர் கூறினார்.

 

Related Articles

Latest Articles