இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது ரி -20 போட்டியில் இந்திய அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா-இங்கிலாந்து மோதும் 4-வது ரி -20 போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களைக் குவித்தது. . அதிகப்படியாக சூர்யகுமார் யாதவ் 57 ஓட்டங்கள் எடுத்தார்.
இதனையடுத்து 186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து அணி களமிறங்கியது. துவக்க வீரர் ஜோசன் ராய் 40 ஓட்டங்களிலும் பட்லர் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த வீரர் மலான் 17 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இந்நிலையில் பேர்ஸ்டோ மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஜோடி ஆட்டத்தை மாற்றினர். அந்த ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர். பேர்ஸ்டோ 25 ஓட்டங்களுடனும் அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே பென் ஸ்டோக்ஸ்சும் இரண்டாவது பந்தில் இயான் மோர்கனும் வெளியேற இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
கடைசி ஓவரில் இங்கிலாந்து அணிக்கு 23 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இந்நிலையில் கடைசி ஓவரை சர்துல் தாகூர் வீசினார்.
முதல் பந்தில் ஜோர்டன் 1 ஓட்டமும் 2-வது பந்தில் ஆர்ச்சர் பவுண்டரியும் 3-வது பந்தில் சிக்சர் அடிக்க ஆட்டம் பரப்பரப்பானது.
4-வது பந்தில் 2 உதிரிகளை விட்டு கொடுத்தாலும் அடுத்த பந்தில் ஒரு ரன்னை மட்டுமே விட்டு கொடுத்தார். 5-வது பந்தில் ஜோர்டன் அவுட் ஆனார். கடைசி பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்திய அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர்.