இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்வதால் வடக்கின் கடல் பாதுகாப்பைக் கண்காணிப்பதற்காகக் கடல் சாரணர்கள் என்ற தொண்டர் அமைப்பை உருவாக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“வடபகுதி கடற்பரப்பில் இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினர் முடியுமானவரை தங்களது கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் கடற்பரப்பின் கண்கா ணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மற்றுமொரு முயற்சியாக இந்த யோசனையை நான் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளேன்.இந்தப் படையின் ஊடாக இந்திய மீன வர்களின் செயற்பாடுகளைக் கண்காணித்து கடற்படையினரது உதவியுடன் கட்டுப்படுத்த முடியும்.” – என்றார்.