இந்தியா வரும் புடினுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு!

இந்​தி​யா​வுக்கு இன்று வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு 5 அடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.
இந்​தியா – ரஷ்​யா​வின் 23-வது உச்சி மாநாடு டெல்​லி​யில் நடைபெறுகிறது. இதில் பங்​கேற்க 2 நாள் பயண​மாக ரஷ்ய அதிபர் புதின் இன்று மாலை டெல்லி வரு​கிறார்.
அவருக்கு குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும், அதிபர் புதினுக்கு குடியரசுத் தலைவர் திர​வுபதி முர்மு சிறப்பு விருந்​துக்கு ஏற்​பாடு செய்துள்ளார்.
அதிபர் புதின் வருகையை ஒட்டி, டெல்லி போலீஸ் உயர​தி​காரி​களு​டன் தேசிய பாது​காப்​புப் படை கமாண்​டோக்​கள், துப்​பாக்​கிச் சுடும் வீரர்​கள், ட்ரோன்​கள், ஜாமர்​கள் உட்பட பல்​வேறு அம்சங்களு​டன் 5 அடுக்கு பாது​காப்​புக்கு ஏற்​பாடு செய்யப்பட்டுள்​ளது.
இதுதவிர, புதினின் பாது​காப்​புக்கு ரஷ்ய கமாண்​டோக்​கள் உட்பட 50-க்​கும் மேற்​பட்​டோர் ஏற்​கெனவே டெல்லி வந்​துள்​ளனர். அவர்கள் ட்ரோன் உதவியுடன் புதின் செல்​லும் பாதைகள், அவர் பங்​கேற்​கும் நிகழ்ச்சி நடக்​கும் இடங்​களை அலசி ஆராய்ந்து வருகின்​றனர். இவை அனைத்​தை​யும் 24 மணி நேர​மும் கண்காணிக்க டெல்​லி​யில் புதி​தாக கட்​டுப்​பாட்டு அறை அமைக்கப்​பட்​டுள்​ளது.
அத்​துடன் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​ப​மும் அதிபர் புதின் பாது​காப்​புக்கு பயன்​படுத்​தப்பட உள்​ளது. முகத்தை அடை​யாளம் காணும் அதிநவீன கேம​ராக்​கள் பல இடங்​களில் பொருத்தப்​பட்டு கண்​காணிப்​புக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.
புதின் இந்​தியா வந்​திறங்​கியதும் டெல்லி போலீ​ஸார் மற்​றும் தேசிய பாது​காப்​புப் படை கமாண்​டோக்​கள் வெளிப்​புற பாதுகாப்புப் பணி​யில் ஈடு​படு​வார்​கள். ரஷ்ய கமாண்​டோக்​கள் புதினை சுற்​றிப் பாது​காப்​பாக இருப்​பார்​கள். பிரதமர் மோடி – அதிபர் புதின் இரு​வரும் சந்​தித்து ஒன்​றாக வரும்​போது, ரஷ்ய மற்றும் இந்​திய கமாண்​டோக்​கள் உள்​புற வளை​யத்​துக்​குள் பாதுகாப்பு பொறுப்பை ஏற்க உள்​ளனர்.
இந்​தியா வரும் அதிபர் புதின், தன்​னுடன் அதிநவீன ‘ஆரஸ் செனட்’ என்ற லிமோ சின் காரை மாஸ்​கோ​வில் இருந்து கொண்டு வரு​கிறார். இந்த கார் மிக பாது​காப்​பானது. இந்த கார் ‘சக்​கரங்​களில் மீதுள்ள கோட்​டை’ என்று புகழப்​படு​கிறது. சீனா​வில் நடை​பெற்ற ஷாங்​காய் ஒத்​துழைப்பு மாநாட்​டின் போது, இந்த லிமோசின் காரில்​தான் பிரதமர் மோடியை அதிபர் புதின் அழைத்து சென்​றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles