இலங்கை என்பது பல்லின மக்களும் வாழும் நாடாகும். இந்நாட்டில் அனைவரும் ஒற்றுமையுடனேயே வாழ்கின்றனர். இந்நிலையில் ஒரு சில பௌத்த மதகுருமார்கள் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றனர். இது விடயத்தில் அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஸ் வலியுறுத்தியுள்ளார்.
” ஒரு சில மதகுருமார்கள் இனவாத்தை தூண்டும் வகையில் தமிழர்களின் வரலாற்றை மாற்றியமைக்க முயற்சிக்கின்றனர்.இது முற்றிலும் தவறானது.ஏனைய அயல் நாடுகள் நம்மை பார்த்து வியக்கும் வண்ணம் நம் ஒற்றுமையை காட்ட வேண்டும்.
இப்படி இனவாதத்தையும் மதவாதத்தையும் காட்ட கூடாது.இவ்வாறு காட்ட எத்தணிப்பவர்களை பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் கைதுசெய்யப்பட வேண்டும்.” – என்றும் வடிவேல் சரேஷ் குறிப்பிட்டார்.