இனி O/L பரீட்சை ஓகஸ்டில் – A/L பரீட்சை டிசம்பரில் ! அமைச்சரவையில் பிரேரணை!!

கல்வி பொதுதராதர சாதாரண  தர பரீட்சையை ஓகஸ்ட் மாதத்திலும், உயர்தர பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்தும் புதிய யோசனைக்கு அனுமதியை பெற எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனால் மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளுக்காக மேலதிகமாக செலவிடும் 9 மாத காலத்தை குறைத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போதே கல்வி அமைச்சின் செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles