இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலும் பாடசாலைகளுக்கு விடுமுறை

இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் ஹேமாகம கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (04) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையை அடுத்து, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, மேற்படி இரு மாவட்டங்களுக்கும் நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று காலை அறிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே சப்ரகமுவ மாகாணத்துக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles