இரத்தினபுரியில் நேற்று மாத்திரம் 72 பேருக்கு கொரோனா தொற்று

இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 72 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

பலாங்கொட சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 14 பேர், குருவிட்ட சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 15 பேர் உட்பட 19 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் இருந்தே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் நேற்று 63 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles