இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மகளான பிரித்தானிய இளவரசி Anne மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(10) இலங்கை வந்தடைந்தார்.
இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை அரசின் அழைப்பின் பேரில் இளவரசி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திக்கவுள்ளார்.










