இலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை – அமைச்சர் மஹிந்தானந்த தெரிவிப்பு

இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்கக்கூடிய வகையில் அரசி, மரக்கறி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் நாட்டில் உள்ளதாகவும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அவசரகால பிரகடனம் தொடர்பான விசேட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஒகஸ்ட் 30 ஆம் திகதி அவசரகால பிரகடனம் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டது. இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு 14 நாட்களுக்குள் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, இதனை நாடாளுமன்றின் ஊடாக செயற்படுத்த முடியும்.

இவ்வாறானதொரு சட்டம் நாட்டுக்குத் தேவையில்லை என்றால் இதனை நிறைவேற்றத் தேவையில்லை. அவசரகால சட்டம் கொண்டுவரப்படுவது ஒன்றும் இது புதிதல்ல. கடந்த காலங்களில் வெல்லம்பிட்டியவில் குப்பை மேடு சரிந்துவிழுந்த காலத்தில்கூட, நல்லாட்சியாளர்கள் அவசரகால சட்டத்தை கொண்டுவந்திருந்தார்கள்.

இன்று சர்வதேச செய்திகளில் இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு கிடையாது என்பதை நான் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். இங்கு உணவு மாபியாவே இடம்பெற்று வருகிறது.

இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த அவசரகாலப் பிரகடனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் எனும் ரீதியில் மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி உணவு வழங்க வேண்டியது எமது கடமையாகும். விவசாயத்துறை அமைச்சர் என்ற வகையில் நான் ஒன்றைக் கூற வேண்டும்.

கடந்த காலங்களில் இரண்டு போகத்தையும் சேர்த்து நாம் 8 இலட்சம் எக்டயாருக்கு நெற்பயிர்ச் செய்கை செய்துள்ளோம். 5.3 மில்லியன் மெட்ரிக் தொன் நெல்லை உற்பத்தி செய்துள்ளோம்.

இதனை 1.6 ஆல் பிரித்தால் 3.2 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி எம்மிடம் தற்போது உள்ளது. இதனால், இலங்கையில் ஒருபோதும் உணவுத்தட்டுப்பாடு ஏற்படவில்லை என்பதை நான் இங்கு உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.

இந்நிலையில், அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி இராணுவ ஆட்சிக்கு ஜனாதிபதி வழிவகுப்பதாக எதிர்க்கட்சியினர் கூறிவருகிறார்கள்.

ஆனால், கடந்த காலங்களில் எதிர்க்கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு போராட்டத்தையும் தண்ணீர் தாரை பிரயோகத்தை மேற்கொண்டோ, தடியடி நடத்தியோ ஜனாதிபதி கட்டுப்படுத்தவில்லை. போராடிய எவரையும் கைது செய்யவில்லை. அவசரகால சட்டத்தை அன்றே கொண்டுவந்து ஜனாதிபதியால் போராட்டங்களை கட்டுப்படுத்திருக்க முடியும்.

ஆனால், அவர் அன்று அவ்வாறு செய்யவில்லை என்பதை எதிர்க்கட்சியினர் புரிந்துக் கொள்ள வேண்டும். அத்தோடு, இந்த அவசரகால சட்டமானது மக்களுக்காக கொண்டுவரப்பட்டது என்பதையும் இவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.” என கூறினார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles