இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 733 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தின் 111 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதில் 101 பேர் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களாவர்.
மேற்படி ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் மேலும் சில ஊழியர்களடம் நேற்று பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவு இன்று காலை வெளியானது. இதன்போது 220 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இதன்படி ஆடைத்தொழிற்சாலை கொத்தணி பரவலால் இதுவரையில் 321 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. அதேவேளை, இலங்கையில் 3 ஆயிரத்து 259 பேர் குணமடைந்துள்ளனர்.
