திருகோணமலை சீனன்குடா விமானப்படை தளத்திலிருந்து விமானி ஒருவருடன் பயணித்த PT6 ரக பயிற்சி விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
கந்தளாய், சூரியபுர பகுதியில் வானில் பறந்துகொண்டிருந்தபோதே, விமானத்துடனான தொடர்பு இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விமானப்படையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.










