இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 617 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் நேற்று மாத்திரம் 106 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் உள்ளவர்கள் என்பதுடன் ஏனையவர்கள் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் என்பதுடன், மேலும் சிலர் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டவர்கள் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களில் ஆயிரத்து 981 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 625 கொரோனா நோயாளிகள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
வைரஸ் தொற்றினால் இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.