இஸ்ரேல் பிரதமர் பதவி விலக வேண்டும் – இஸ்ரேலியர்கள் போராட்டம்

இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu உடன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானதற்கும், 200 இற்கு மேற்பட்டோர் பணயக் கைதிகளால் பிடித்துச்செல்லப்பட்டதற்கும் பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய Jerusalem பகுதியில் உள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கு முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரத்து 900 குழந்தைகள் உட்பட 9 ஆயிரத்து 488 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles