உச்சகட்ட பரபரப்பு – இறுதி பந்தில் வெற்றிக்கனியை ருசித்த இங்கிலாந்து!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ரி – 20 போட்டியில் இங்கிலாந்து அணி 2 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்றிரவு நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா அணி, முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

ஸ்டேடியத்தில் ரசிகர்களை அனுமதிக்காமல் கொரோனா தடுப்பு உயிர் மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி போட்டி நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களைக் குவித்தது. டேவிட் ஹோர்னர் 50 ஓட்டங்களைப்பெற்றார்.

161 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இப்போட்டியில் இறுதிவரை பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்கவில்லை.

Related Articles

Latest Articles