உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து வெளியேற மறுக்கும் முன்னாள் அமைச்சர்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அமைச்சர் பதவியை விட்டு விலகிய பின்னரும் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (06) பாராளுமன்றத்தில் தயாசிறி ஜயசேகர செலுத்தாத மின்சாரக் கட்டணம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சுப் பதவியில் இருந்து விலகிய போதிலும், அவர் இன்னமும் உரிய உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருப்பதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எம்.பி.யை வீட்டை விட்டு வெளியேறுமாறு தெரிவித்ததாகவும், அவர் வெளியேறத் தயாராக இருப்பதாகவும், உறுப்பினர் சேவைகள் பிரிவுக்கு அறிவித்துள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவைத் தவிர மேலும் பல முன்னாள் அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

Related Articles

Latest Articles