உரும்கி (Urumqi) படுகொலையை நினைவு கூர்தல்: சீனத் துன்புறுத்தலுக்கு எதிராக ஆஸ்திரியாவில் உய்குர் குரல்

சீனாவில் உய்குர்கள் மற்றும் பிற துருக்கிய முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தக் கோரி, ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ள சீனத் தூதரகத்தின் முன் ஆஸ்திரியாவில் உள்ள உய்குர் மக்கள் போராட்டம் நடத்தினர்.

ஜூலை 5, 2009 அன்று, உரும்கியில் நடந்த படுகொலையை நினைவுகூரும் வகையிலும், கிழக்கு துர்கெஸ்தானில் (சீனாவின் ஜின்ஜியாங் மாகாணம்) நடந்து வரும் இனப்படுகொலைக்கு எதிராக குரல் எழுப்புவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், ஆஸ்திரியாவில் இருந்து சுமார் 50 உய்குர்கள், சீனத் தூதரகத்தின் முன் கூடி சீன அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த படுகொலையில் உய்குர்களில் பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர்.

ஆஸ்திரியாவில் உய்குர் சமூகத்தின் தலைவர் மெவ்லான் தில்ஷாட் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆஸ்திரியாவின் பல்வேறு மாகாணங்களில் இருந்து உய்குர் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். சர்வதேச சமூகம் அமைதியாக இருக்க வேண்டாம் என்றும் இந்த இனப்படுகொலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

ஜின்ஜியாங்கின் மிகப்பெரிய நகரமான உரும்கியில் ஜூலை 5, 2009 அன்று தொடங்கிய சிறுபான்மை இனமான உய்குர்களுக்கும் ஹான் சீனர்களுக்கும் இடையேயான மூன்று நாட்கள் வன்முறையில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர், 1,700 பேர் காயமடைந்தனர். இவை சீன அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களாகும். இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை மிக அதிகம் என கூறப்படுகிறது. இந்த நாள் CCP இன் இன அழிப்புக் கொள்கையின் ஒரு திருப்புமுனையாகவும் தொடக்கமாகவும் அமைந்தது. 2016/2017 ல் சீனாவிற்குள் ஜி ஜின்பிங் தனது அதிகாரத்தை பலப்படுத்தத் தொடங்கியபோது இவ்வாறான வன்முறைகள் அதிகரித்தன. அவர் தனது தன்னலத்தை முன்னிட்டு உய்குர்களை பகடைகளாகப் பயன்படுத்தினார்.

இந்த குழுக்களின் 1.8 மில்லியன் உறுப்பினர்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர், பின்னர் விடுவிக்கப்பட்ட கைதிகள் கடுமையான மனித உரிமை மீறல்கள், சித்திரவதை, கற்பழிப்பு, கட்டாய உழைப்பு உட்பட பரவலான துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக புகாரளித்தனர். பலர் திரும்பி வரவில்லை, அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles