உலகிலேயே வயதான தம்பதியினர் – கின்னஸ் சாதனை!

எக்குவடோர் (Ecuador) தென் அமெரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஒரு குடியரசு ஆகும். இந்த நாட்டைச் சேர்ந்த 110 மற்றும் 104 வயதுடைய தம்பதியினர்தான் உலகிலேயே மிக பழமையான ஜோடியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி, ஜூலியா மோரா. தனது பெற்றோருக்குத் தெரியாமல் 1941 ஆம் ஆண்டு வால்ட்ராமினா குயின்டெரோஸை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 79 ஆண்டுகள் ஆகிறது.

இப்போது ஜூலியா மோராவுக்கு 110 வயது.வால்ட்ராமினா குயின்டெரோஸ்க்கு 104 வயது. இவர்கள் தான் உலகிலேயே மிக பழமையான ஜோடியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

தங்களுடைய பெரிய குடும்பத்தை பிரிந்திருப்பதால் கொஞ்சம் மனச் சோர்வடைந்திருந்தாலும் இருவரும் நல்ல ஆரோக்கியத்துடனும், தெளிவாகவும் இருக்கின்றனர்.

கின்னஸ் சாதனைகளில் நீண்டகால திருமண தம்பதிகள் என இடம்பெற்றிருந்தாலும், இருவருக்கும் இடையே எந்த சச்சரவும் இல்லாமல் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
இவர்களின் இருவரின் மொத்த வயது 215க்கு உட்பட்டது. மோரா மார்ச்10, 1910இல் பிறந்திருக்கிறார்.

குயின்டெரோஸ் அக்டோபர் 16, 1915இல் பிறந்திருக்கிறார். இவர்கள் இருவரும் 1941ஆம் ஆண்டு குயிட்டோலா இக்லெசியா டி எல் பெலென் ஆலயத்தில் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள். எக்குவடோர் தலைநகரான குயிட்டோவில் வசித்துவருகின்றனர். ஆகஸ்ட் மாதத்தில் இவர்கள் கின்னஸ் சான்றிதழைப் பெற்றனர்.

இருவரும் முன்பு மிகவும் சுறுசுறுப்பானவர்களாக இருந்தார்கள் எனவும், ஆனால் இப்போது சற்று தளர்ந்துவிட்டார்கள். குறிப்பாக ஒரு மாத காலமாகத்தான் இப்படி இருப்பதாகவும், தங்கள் பெரிய குடும்பத்தை பிரிந்திருப்பதால் வருத்தத்தில் உள்ளதாகவும் அவரது மகள் சிசிலியா கூறுகிறார்.

இவர்களுடைய 4 குழந்தைகள், 11 பேரக்குழந்தைகள், அவர்களுடைய 21 குழந்தைகள், அவர்களுடைய 1 குழந்தை என ஐந்து தலைமுறைகள் இருப்பதாக கூறுகிறார். ஆனால் எப்போதும் குடும்பத்துடன் இருக்க விரும்பும் இந்த தம்பதிக்கு மார்ச் மாதத்திலிருந்து யாரையும் பார்க்கமுடியவில்லை.

தனது தந்தை தினமும் டிவி பார்த்துக்கொண்டு, பால் குடிப்பது, இனிப்பு வகைகளை விரும்பி சாப்பிடுவது என இருப்பார், தாய் செய்தித்தாள்களை விரும்பி படிப்பார் எனவும் சிசிலியா கூறுகிறார்.

முன்னதாக வயதான தம்பதியர் பட்டியலில் 212 வயது 52 நாட்கள் வாழ்ந்த டெக்சாஸ் தம்பதியினர் சார்லட் மற்றும் ஜான் ஹேன்டர்சன் இருந்தனர். இப்போது அந்த சாதனையை எக்குவடோர் தம்பதியினர் முறியடித்துள்ளனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles