உள்ளக பொறிமுறைமீது நம்பிக்கை இல்லை!

உள்ளகப் பொறிமுறையால் நீதி கிடைக்காது என்ற தொடர்ச்சியான வெளிப் படுத்தலை ஐ.நா. புறம்தள்ளுவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா பழைய பஸ் நிலையப்பகுதியில் நேற்று இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக்கருத்து தெரிவித்த போதே அவர்கள்இவ்வாறு குறிப்பிட்டனர்.

‘உள்ளகப் பொறிமுறையை நாம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றோம்.அப்படி இருந்த போதும் அதனையே மேற்கொள்ளுமாறு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஓர் இனப்படுகொலை இடம்பெற்ற நாட்டில் அதனை மேற்கொண்டகுற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கு இந்த உள்ளகப் பொறிமுறைஎப்படி சாத்தியமான முறையில் வழி வகுக்கும் என எமக்குத் தெரியவில்லை.

இந்தநாட்டில் குற்றம் இழைத்தவர்களுக்கு உயர் பதவிகள் வழங்கிக்கௌரவிக்கும் நிலையே தொடர்ச்சியாக இருக்கின்றது எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் தாயக பகுதிகளில் தற்போது வெளிப்படும் மனித புதைகுழிகள் இங்கு இனப்படுகொலை நடந்துள்ளது என்பதை உணர்த்தி நிற்கின்றன.

இனப்படுகொலை நடந்துள்ளது என்பதற்கு சாட்சியமாகவே இந்தப் புதைகுழிகள் வெளிப்படுகின்றன. இவற்றைச் செய்தவர்கள் யார் என்ற உண்மையை சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே அறியமுடியும்.

தொடர்ச்சியாக நீதி கோரிப் போராடி வரும் நாம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்30 ஆம் திகதி சர்வதேச காணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தில் சர்வதேசவிசாரணையினை வலியுறுத்தி வடகிழக்குதழுவிய ரீதியில் மாபெரும் போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கவுள்ளோம் – எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles