தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள பகுதிகளில் நாளை (13) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வியாழக்கிழமை வரை வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பகுதிகளில் ஊரடங்கு அமுலில் இருந்தாலும் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருள் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை திறப்பதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எனினும், சுகாதார பாதுகாப்பு நலனைக்கருத்திற்கொண்டே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 18 பொலிஸ் பிரிவுகளிலும், மன்னாரில் இரு பகுதிகளிலும் ஊரடங்கு அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
