‘எங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துங்கள்’

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் லெனாட்ஸ் மேல்பிரிவு தோட்டத்தில் இலக்கம் 33 தொடர் குடியிருப்பில் வசித்து வரும் 12 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மாலை பெய்த கடும் மழை காரணமாக சென் லெனாட்ஸ் மேல்பிரிவு தோட்டத்தில் காட்டு லயம் என அழைக்கப்படும் இலக்கம் 33 தொடர் குடியிருப்பின் பின்பகுதியில் உள்ள 30 அடி உயரமான மண்மேடு பகுதி சரிந்து வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக இப்பகுதியில் வசித்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் சென் லெனாட்ஸ் தோட்ட முன்பள்ளி கட்டடத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தங்க வைக்கப்பட்ட 37 பேரில் பத்து சிறுவர்களும் அடங்குகின்றனர். இச் சம்பவத்தில் யுவதி ஒருவர் மண்சரிவில் சிக்கியுள்ளார். அவரை காலில் காயத்துடன் அருகில் உள்ளோர் மீட்டுள்ளனர்.

அதேநேரத்தில் அந்த லயன் குடியிருப்பில் வசிக்கும் 12 குடும்பங்கள் மழைக்காலங்களில் தொடர்ந்தும் இவ்வாறு அச்சத்துடன் வசிப்பதாக தெரிவிக்கின்றனர். சுமார் 07 வருடங்களுக்கு மேல் இப்பகுதியில் வசிப்பதாக தெரிவிக்கின்றனர். இம்முறை மண்சரிவு அனர்த்தத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.தோட்ட நிர்வாகத்திடம் தமது நிலையை எடுத்துரைத்துள்ள போதிலும் மாற்று இடத்தில் பாதுகாப்பாக வாழ இடம் வழங்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மாவட்ட அரசியல் வாதிகளின் கவனத்திற்கும் இவ்விடயம் கொண்டுவரப்பட்டும் நடவடிக்கைகள் ஏதும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே தொடர்ந்தும் எம்மை பாதுகாப்பான இடத்தில் வீடுகளை அமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்,தலைமைகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles