இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் ஜூலி ஜெசாங்கிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாசவுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை இதன்போது நினைவுகூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், அந்த வலுவான நட்புறவை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
குறிப்பாக இலங்கையுடன் நிலவும் சமூக-பொருளாதார மற்றும் கலாசார உறவுகள் குறித்து தூதுவர் கவனம் செலுத்தியதுடன் அது மேலும் வலுவடையும் என நம்பிக்கை வெளியிட்டார்.










