” எனக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் – திட்டமிட்ட அடிப்படையில் அவதூறு”

” புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி கடை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையை முறியடிப்பதில் முன்னின்று செயற்பட்டவர்களில் நானும் ஒருவன். எனவே, அரசியல் ரீதியில் என்னை பழிவாங்கும் நோக்கில் தற்போது அவதூறு பரப்பட்டுவருகின்றது. ‘கைது’ கதைகூட இதன் ஓர் அங்கம்தான்.”  –  என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட  உறுப்பினரும், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான முருகையா ரவிந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி கடை அமைப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். கோழி இறைச்சி விற்பனை வர்த்தகர் ஒருவரும் இது தொடர்பான பேச்சுகளில் முன்னின்று செயற்பட்டார். ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட தரப்புகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களில் நானும் பங்கேற்றேன். இதன்பயனாக மாட்டிறைச்சி கடை திறப்பது நிறுத்தப்பட்டது.

இந்நிலையிலேயே மாட்டிறைச்சி கடை வருவதை தடுக்க தீவிரமாக செயற்பட்ட கோழி இறைச்சிகடை வர்த்தகர் இலக்கு வைக்கப்பட்டார்.  அவரின் வீட்டுக்குள் பிரதேச சபையின் தற்போதைய தலைவர் ரவி குழந்தைவேல்,  செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், எவ்வித அறிவித்தலும் இன்றி அத்துமீறி நுழைந்து அநாகரீகமாக செயற்பட்டனர். வீட்டுக்குள் வீடியோ எடுக்கும் ஊடகவியலாளரையும் அழைத்து வந்திருந்தனர். இதனால்  வீட்டில் இருந்தவர்கள் தர்மசங்கடத்துக்கு உள்ளாகினர்.

எனது பக்கத்து வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. அங்கு கூச்சல் சத்தம் கேட்டதையடுத்து நான் சென்றேன். முறையாகவா – சட்டத்தின் பிரகாரமா பரிசோதனை நடக்கின்றது என வினவினேன். ஊடகவியலாளர் ஒருவர் இருந்ததால் அதிகாரிகள் வேண்டுமென்றே என்னை இலக்கு வைத்து செயற்பட்டனர்.

சட்டம் பற்றி கேட்டபோய், கடமைக்கு இடையூறு விளைவித்தேன் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டது.

அவ்வாறு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் எமது தரப்பு விளக்கத்தை கேட்ட பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டோம். வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், சட்டத்தின் பிரகாரம் உரிய நடைமுறைகளை பின்பற்றி நாம் வீடு திரும்பினோம். பொலிஸார் எம்மை கைது செய்து சிறையில் அடைக்கவில்லை. அவ்வாறு அவதூறு பரப்பட்டது. அரசியல் ரீதியில் என்னை பழிவாங்கும் நோக்கிலேயே இவ்வாறு தகவல் பரப்பட்டது. ” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles