நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி விவாதம் நடத்தப்படும் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அன்றைய தினமே மேற்படி சட்டமூலம் நிறைவேறும் எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல எனவும், சாதாரண பெரும்பான்மையுடன் அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றலாம் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் மேற்படி தீர்ப்பை சபாநாயகர் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்நிலையிலேயே மேற்படி சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் 17 ஆம் திகதி விவாதம் நடத்தப்படவுள்ளது.
தேசிய மக்கள் சக்தி வசம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைபலம் இருப்பதால் சட்டமூலம் இலகுவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
