எல்ல பகுதியில் குளவிக்கொட்டு: இரு சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு!

தொமோதரை ,எல்ல பகுதியில் உள்ள 9வளைவு பாலத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்த ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த இரு சுற்றுலாப் பயணிகள் குளவிக் கொட்டிற்கு இலக்காகி தெமோதரை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் நேற்று(25) பிற்பகல் வேளையில் பதிவாகியுள்ளது.

குளவி கொட்டிற்கு இலக்கான குறித்த இருவரும் 23 வயதுடைய இளைஞனும்,யுவதிமாவர் அவர்களின் உடல்நிலை பாரதூரமாக இல்லையென வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசறை நிருபர்

Related Articles

Latest Articles