எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு இந்திய மீனவர்கள் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் குறிப்பிட்டார்.
நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று அதிகாலை மீனவர்கள் நால்வரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் – கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்களே ஒரு படகுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.










