பாராளுமன்றத் தேர்தலில் ஏழு மலையக எம்.பிக்கள் தெரிவாகியுள்ளனர். அத்துடன், முன்னாள் மலையக எம்.பிக்கள் அறுவர் தோல்வி அடைந்துள்ளனர்.
நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி , மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இருந்தே மலையக தமிழ்ப் பிரதிநிதித்துவம் வென்றெடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட கிஷ்ணன் கலைச்செல்வி 33346 வாக்குளை பெற்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்ப்பில் ஜீவன் தொண்டமான் 46,438 வாக்குகளை பெற்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பழனி திகாம்பரம் 48018 வாக்குளை பெற்றும், வே.இராதாகிருஷ்ணன் 42,273 வாக்குகளை பெற்றும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் இருந்து கிட்ணன் செல்வராஜ், அம்பிகா சாமுவேல் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சுந்தரலிங்கம் பிரதீப்பும், மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட சரோஜா போல்ராஜும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள ராமலிங்கம் சந்திரசேகரனும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினால் மொத்தமாக 8 மலையக எம்.பிகள் இம்முறை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவர்.
மனோ கணேசன் தேசியப்பட்டிலில் வந்தால் அந்த எண்ணிக்கை 9 ஆக உயரும்.
வேலுகுமார், அரவிந்தகுமார், உதயகுமார், மருதபாண்டி ராமேஸ்வன் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர்.
