சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.
செப்டம்பர் 27 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கவுள்ள அவர்கள் பல்வேறு தரப்பினருடனும் பேச்சு நடத்தவுள்ளனர்.
இலங்கைக்கு வழங்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்விற்காக குறித்த குழு வருகை தரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முதல் கட்ட கடன் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இரண்டாம் கட்ட கடன் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.










