ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் Abu Ibrahim al-Hashimi al-Qurayshi, அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டுள்ளார்.
சிரியாவின் வடமேற்கு எல்லையில் இன்று அமெரிக்க படையினர் நடத்திய விசேட பயங்கரவாதத்திற்கெதிரான தாக்குதல் (Counter Terrorism) நடவடிக்கையின் போதே அவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் நடவடிக்கையின் போது அவரின் குடும்ப உறுப்பினர்கள் 13 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க படையினர் அனைவரும் பத்திரமாக திரும்பியுள்ளதாகவும் வீரமும் திறமையும் மிக்க சி ப்பாய்களை தான்
பாராட்டுவதாகவும் ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.